15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. கர்ப்பம்.. திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தானிப்பாடி பகுதியை சார்ந்த குடும்பத்தில் தந்தை இறந்த நிலையில், 18 வயது மற்றும் 15 வயது சிறுமிகள் இருந்தனர். இவர்கள் இருவரும் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், இதே கிராமத்தை சார்ந்த சின்ராசு என்பவனின் மகன் மனோஜ் (வயது 19), சிறுமியுடன் பழகி வந்துள்ளான். 

சிறுமியை திருமணம் செய்வதாக கூறிய காமுகன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதனை வைத்தே பலமுறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த தருணத்தில், சிறுமி இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். 

நேற்று சிறுமிக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படவே, சிறுமியிடம் பாட்டி விசாரித்த சமயத்தில் உண்மை வெளிவந்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சிறுமியின் பாட்டி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai child girl sexual abuse police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->