திருவண்ணாமலை அருகே சிறுவன் எரித்து கொலை!! மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!  - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் அருகே, ஆவூர் பெரிய ஏரியில் இன்று காலை கரும்புகை வந்துள்ளது. இதனை தொடர்ந்து, ஏரிக்கு சென்று அப்பகுதியினர் பார்த்தபோது சிறுவன் ஒருவன் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது 12 வயது மதிக்கத்தக்க சிறுவனுக்கு அருகில் கோழிகளின் இறகு கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

சிறிது தூரத்தில் மண்ணெண்ணெய் கேன் வீசப்பட்டு இருந்தது. எனவே, சிறுவனை யாரோ எரித்துக் கொலை செய்திருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் தோன்றியது. கொலையாளிகள் எந்த ஊரை சேர்ந்தவர் எரித்துக்கொல்லப்பட்ட அல்லது மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கப்பட்டு கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்ட சோதனைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUVANNAMAI CHILD DEATH


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->