பொண்டாடி நம்பர் வாங்கி மாமான்னு கூப்பிட்டால் கடன்... தற்கொலை செய்த வாலிபரின் பகீர் வாக்குமூலம்.!!
Thiruvallur youngster suicide due to loan man cheat affair
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணூரை சார்ந்தவர் சரத்குமார் என்கிற குட்டி. இவர் கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக மீஞ்சூர் பகுதியை சார்ந்த மஞ்சுளா என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் கறிக்கடை தொழில் செய்து வந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக எண்ணூர் பகுதியை சார்ந்த பாபு என்ற நபரிடம் கந்துவட்டி வாங்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக பணத்தை திருப்பி தராமல் இருந்த நிலையில், பாபு வட்டிப்பணத்தை கேட்க வந்த சமயத்தில், மஞ்சுளாவிற்கும் பாபுவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இந்த விஷயம் சரத்குமாருக்கு தெரியவந்துள்ளது. மேலும், கள்ளக்காதல் காரணமாக தனது குழந்தைகளை மஞ்சுளா தனது தாயாரின் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார்.
இந்த சமயத்தில், சரத்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவே, இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த சரத்குமார் 4 விடியோவை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார். இது குறித்த வாக்குமூலத்தில், தனது மரணத்திற்கு கந்துவட்டி பாபு மற்றும் அவனது குடும்பத்தினர் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள்..
கடன் வாங்கும் விதத்தில் பாபு, முதலில் மனைவியின் அலைபேசி என்னை வாங்குவார். இது எழுதப்படாத ஒப்பந்தம். அவசரத்திற்கு கேட்கும் கடனின் நிலை கூட இதுதான். பின்னர் வழியின்றி மனைவியின் அலைபேசி என்னை கொடுத்தால், மாமா என்று அழைத்தால் மட்டுமே பணம் தருவேன் என்று கூறுவார். இது அவனிடம் எழுதப்படாத கடன் ஒப்பந்தம் ஆகும்.
கடனை கொடுக்க தாமதம் ஆனதால் எனது மனைவியின் மனதை பேசிய பாழாக்கி விட்டான். இந்த சூழலில், தினமும் பாபுவின் குடும்பத்தினர் எனது வீட்டிற்கு வந்து தொல்லை அளித்தனர். இதனால் வேறு வழியின்றி இம்முடிவை எடுக்கிறேன். எனது குடும்பத்தின் சந்தோசத்தை களைத்து விட்டான் என்று கூறியுள்ளார். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvallur youngster suicide due to loan man cheat affair