வீடு முழுவதும் இரத்தம்.. காவல் துறையினருக்கு பேரதிர்ச்சி.. கழுத்தறுத்து இரத்த வெள்ளம்.! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் கழுத்தை அறுத்து, இரவு முழுவதும் இரத்த வெள்ளத்தில் உறங்கிய நபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உளுந்தை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். 

இந்நிலையில், இவரின் வீட்டில் இன்று காலை துர்நாற்றம் வீசிய நிலையில், வீட்டின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்துள்ளார். இதன்போது, மாரிமுத்து கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதற்குள்ளாக தூக்கத்தில் இருந்து எழுவது போல எழுந்த மாரிமுத்துவை பார்த்து அவரை வேடிக்கை பார்க்க வந்த மொத்த மக்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். விரைந்து வந்த காவல் துறையினர், மரிமுத்துவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், முதல் நாள் இரவில் முழு போதை போதையில் இருந்த மாரிமுத்து, தனக்குத்தானே கழுத்தை அறுத்ததும், கத்தி ஆழமாக கழுத்தில் பதியாததால் உயிருக்கு போராடிய சம்பவம் நடந்துள்ளது. விசாரணையில், மாரிமுத்து கடன் தொல்லையால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Youngster Suicide Attempt Police Investigation 24 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->