கள்ளக்காதலனை நம்பி சென்ற பெண் கதறக்கதற கொலை.. கை, கால்களை கட்டிப்போட்டு வாயில் விஷம் ஊற்றிய பயங்கரம்.!
Thiruvallur woman Murder by Affair Man Police Investigation 7 March 2021
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை வெங்கல் கிராமத்தை சார்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவரது மனைவி பிரியங்கா (வயது 24). திருவாலங்காடு பகுதியை சார்ந்தவர் ராஜ்குமார் (வயது 25). இவர் பொக்லைன் இயந்திர வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
பிரியங்காவிற்கும், ராஜ்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருந்த நிலையில், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த விஷயம் தொடர்பாக அறிந்த கணவனுக்கும் - மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்து வெளியேறிய பிரியங்கா, பழையனூர் பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் தோழியின் இல்லத்திற்கு செல்வதாக கூறி வீட்டினை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், அங்கு செல்லாமல் நார்த்தவாடா கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கள்ளக்காதலன் ராஜ்குமாருடன் தங்கியிருந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக கள்ளக்காதல் ஜோடிகள் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், கள்ளக்காதல் ஜோடிகளுக்குள் தீடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா அங்கிருந்து தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று, கள்ளகாதலியின் இல்லத்திற்கு சென்ற ராஜ்குமார், அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில், அவரை கொலை செய்ய திட்டமிட்டு வீட்டிற்குள் அடித்து துன்புறுத்தி, கைகளை கட்டிப்போட்டு விஷம் கலந்த குளிர்பானத்தை வாயில் ஊற்றியுள்ளார்.
இதனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே வாந்தி எடுத்த பிரியங்கா மயங்கி விழுந்து இருக்கிறார். இதனையடுத்து, பிரியங்காவின் தோழிக்கு தொடர்பு கொண்ட ராஜ்குமார், பிரியங்கா விஷம் குடித்து இருப்பதாக வரவழைத்துள்ளார். இருவரும் சேர்ந்து பிரியங்காவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக திருவாலங்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், ராஜ்குமாரின் கொடூரம் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, காமுக கொடூரன் ராஜ்குமாரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvallur woman Murder by Affair Man Police Investigation 7 March 2021