மகளின் கள்ளக்காதலனை குடும்பமாக சேர்ந்து வெட்டிக்கொலை செய்த குடும்பம்..! - Seithipunal
Seithipunal


மகளின் கள்ளக்காதலனை குடும்பமே சேர்ந்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளேரித்தாங்கல் பகுதியை சார்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). இவர் வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவருக்கும், காக்களூர் ஆஞ்சனேயபுரம் பகுதியில் உள்ள கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் சத்யா (வயது 30) என்ற பெண்மணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  

இந்த விஷயம் தொடர்பாக அறிந்த சத்யாவின் பெற்றோர் தங்களின் மகளை கண்டிக்கவே, இதனைகண்டுகொள்ளாத சத்யா தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக மாற்றியுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சத்யாவின் வீட்டிற்கு சத்யாவின் தந்தை சங்கர், தாய் செல்லம்மாள், தம்பி வினோத் மற்றும் உறவினர்கள் 10 பேர் வந்துள்ளனர். 

இதன்போது, வழக்கறிஞர் வெங்கடேசனும் வீட்டில் இருந்த நிலையில், பேச்சுவார்த்தையின் போதே அவர்களுக்குள் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த சத்யாவின் குடும்பத்தினர் வெங்கடேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சத்யா குடும்பத்தினரை தடுக்க முயற்சித்தும் பலனில்லை. 

சத்யாவின் மீதும் பலத்த வெட்டுக்காயம் விழுந்த நிலையில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சத்யா மயக்க நிலையில் இருந்ததால், அவரும் இறந்துவிட்டதாக எண்ணியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது கேட்ட அலறல் சத்தத்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர். 

மேலும், பொதுமக்களும் அலறல் சத்தம் கேட்டதும் வீதியில் கூடியதால் உஷாரான சத்யாவின் பெற்றோர் தரப்பு கதவை வெளிப்புறமாக தாழிட்டு தப்பி சென்றுள்ளனர். தகவலை அறிந்ததும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரகாசன், காவல் ஆய்வாளர் ஷோபனா தேவி, உதவி ஆய்வாளர் தேவேந்திரன் உட்பட காவல் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

பூட்டிய வீட்டிற்குள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் வழக்கறிஞர் வெங்கடேசன் இரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்துள்ளார். சத்யா உயிருக்கு போராடிய நிலையில் இருக்க, அவரை உடனடியாக மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சத்யாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வெங்கடேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் மற்றும் சத்யாவிடம் பெற்ற முதற்கட்ட தகவலின் பேரில் தப்பி சென்ற சத்யாவின் குடும்பத்தினர் 6 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

வழக்கறிஞர் வெங்கடேசனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், சத்யாவுக்குக் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சத்யா வெங்கடேசனுடன் பழகிய பின்னர் திருநின்றவூரில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக தான் காக்களூர் ஆஞ்சனேயபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான தொடர் விசாரணை நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Vellerithangal Affair Man Murder by Woman Family Members 19 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->