தடுப்பூசி செலுத்திய 9 மாத கர்ப்பிணி மரணம்.. உறவினர்கள் போராட்டம்.!
Thiruvallur Thiruthani Woman Died After Vaccination She 9 Month Pregnant
தடுப்பூசி செலுத்திக்கொண்ட கர்ப்பிணி பெண்மணி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகேயுள்ள புதூர் மெட்டுக்காலனி பகுதியை சார்ந்தவர் நந்தகுமார் (வயது 32). இவரது மனைவி லாவண்யா (வயது 35). இவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்த லாவண்யா நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் திடீரென உடல் உபாதை ஏற்பட்டு இருக்கிறது.
இதனையடுத்து, உறவினர்கள் பட்டறைபெருமாந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லாவண்யாவை அனுமதிக்க, அவருக்கு காலையில் அதிகளவு வலி ஏற்பட்டு வாயில் நுரை தள்ளியுள்ளது. லாவண்யா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் பெரும் ஆவேசத்திற்கு உள்ளாகிய உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவே, தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thiruvallur Thiruthani Woman Died After Vaccination She 9 Month Pregnant