ரேஷன் அரிசி விற்க வருவதுபோல, மூதாட்டிகளை குறிவைத்து நகை கொள்ளை.. தம்பதி கைவரிசை.. உஷார்.!
Thiruvallur Thiruthani Aged Woman Cheated and Robbery by Couple
மூதாட்டியை கட்டிப்போட்டு 10 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற தம்பதியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியை சார்ந்த மூதாட்டி தனலட்சுமி (வயது 85). இவர் இன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதன்போது, வீட்டிற்கு வந்த தம்பதி, தங்களிடம் ரேஷன் அரிசி உள்ளது என்றும், அதனை விலைக்கு வேண்டுமா? என்றும் கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய மூதாட்டி தம்பதியை வீட்டிற்குள் அனுமதித்து, அவர்கள் கொண்டு வந்த அரிசியை பார்வையிட்டுள்ளார். தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்துகொண்ட தம்பதி, தனலட்சுமியை சேரில் வைத்துவிட்டு கயிற்றால் கட்டியுள்ளனர்.
பின்னர், மூதாட்டி அணிந்திருந்த 10 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். மூதாட்டியை அழைத்தும் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்க்கையில் விபரம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் மர்ம தம்பதியை தேடி வருகின்றனர். மேலும், அறிமுகம் இல்லாத நபர்கள் வந்தால் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thiruvallur Thiruthani Aged Woman Cheated and Robbery by Couple