#Breaking: அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்... திமுக பிரமுகர்கள் வெறிச்செயல்.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட பெருமாள்பட்டு அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன். இவர் இன்று காலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் பணம் மக்களுக்கு நியாய விலைக்கடைகளில் சரியாக வழங்கப்படுகிறதா? என சோதனை செய்ய சென்றுள்ளார். 

பெருமாள்பட்டு ஓம்சக்தி நகர் நியாயவிலைக்கடைக்கு சீனிவாசன் சென்ற நிலையில், அங்கு இருந்த திமுக பிரமுகர்கள் சீனிவாசனிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், அவர் நான் ஊராட்சி தலைவர் என்ற முறையில் பணிகளை கவனிக்க வந்ததாக விளக்கம் அளித்தும் அவர்கள் கேட்கவில்லை. 

சீனிவாசன் தனியாக வந்திருந்தால், அங்கு கும்பலாக இருந்த திமுகவினர் திடீரென சீனிவாசனை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து, இந்த தகவல் எப்படியோ அதிமுகவினருக்கு தெரியவர, அவர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர். 

கூட்டம் கூடியதை கண்டதும் திமுகவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற நிலையில், அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Poonamallee Perumalpattu ADMK DMK Supporters Fight 15 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->