தாயை மகன் பார்க்கக்கூடாத கோலத்தில் கண்ட மகன்.. சிறுவனுக்கு தாயின் கள்ளக்காதலனால் அரங்கேறிய பயங்கரம்.!
Thiruvallur Ponneri Man Murder his Affair Woman Son Police Arrest Culprits 17 Sep 2021
தனது தாயின் கள்ளக்காதல் உறவை நேரில் பார்த்த மகன், தாயின் கள்ளகாதலனால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளான்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, நெடும்பரம்பாக்கம் கிராமத்தை சார்ந்தவர் செல்வம் என்ற காமராஜ் (வயது 40). இவரது மனைவி துர்கா (வயது 30). இவர்கள் இருவருக்கும் 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கிறார். மூத்த மகன் தனசேகர் என்ற சூர்யா (வயது 14).
சூர்யாவை அவரது தாத்தா கோவிந்தசாமி வளர்த்து வந்துள்ளார். பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்த சூர்யா, கடந்த 9 ஆம் தேதி முதல் மாயமாகி இருக்கிறார். அவரை பல இடங்களில் தேடியும் காணாததால், பேரனை கண்டறிந்துதரக்கூறி கோவிந்தசாமி சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் மாயமான சூர்யாவை தேடி வந்த நிலையில், அங்குள்ள நத்தம் கிராமத்தின் கோவில் குளத்தில் இருந்து சூர்யாவை பிணமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர்.
விசாரணையில், சம்பவத்தன்று வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் நத்தம் கிராமத்தை சார்ந்த கோபால் என்ற கோபாலகிருஷ்ணன் (வயது 24), சூர்யாவை தனது இருசக்கர வாகனத்தில் கடைசியாக அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கோபாலகிருஷ்ணனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்வம் - துர்கா தம்பதியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, துர்கா கணவரிடம் சண்டையிட்டு நத்தம் கிராமத்தில் இருக்கும் தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, துர்காவுக்கும் - பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இருவரும் உல்லாசமாக இருப்பதை சிறுவன் சூர்யா நேரில் பார்த்துள்ளார்.
இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய கோபால், சூர்யா விஷயத்தை வெளியே சொல்லிவிடுவான் என எண்ணி, கடந்த 9 ஆம் தேதி சிறுவனை அழைத்துச்சென்று கொலை செய்து இருக்கிறார். மேலும், உடலை கோவில் குளத்தில் வீசிவிட்டு வந்துள்ளார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, செல்வத்தை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைக்கவே, துர்காவிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thiruvallur Ponneri Man Murder his Affair Woman Son Police Arrest Culprits 17 Sep 2021