தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 7 வயது சிறுமி பலி?.. மருத்துவமனை சூறை..! - Seithipunal
Seithipunal


தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி, மருத்துவமனையை சூறையாடினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி எம்.ஜி.ஆர் நகரை சார்ந்தவர் குமார் (வயது 38). இவரது மனைவி ரேவதி (வயது 28). இவர்கள் இருவருக்கும் லட்சிதா என்ற 7 வயது மகள் இருக்கிறார். சிறுமி லட்சிதா அங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதியன்று லட்சிதா உடல்நலக்குறைவால் அவதிப்படவே, பொன்னேரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர், ஊசி செலுத்தி அனுப்பி வைத்துள்ளார். 

இதற்குப்பின்னர், லட்சிதாவின் கழுத்தில் கட்டி ஏற்படவே, கட்டி பெரிதாக மாறி உடல் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவே, அவர்களின் அறிவுறுத்தலுக்கு பின்னர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், லட்சிதாவை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுமி லட்சிதா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்ததாக கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டு நாற்காலிகளை தூக்கி வீசி, கண்ணாடியை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டு சூறையாடினர். 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொன்னேரி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து லட்சிதாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். பின்னர், பெற்றோர்கள் சார்பில் வழங்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Ponneri Child Girl Died Private Hospital Wrong Treatment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->