என் தாயை அவதூறாக பேசினான்... திருவள்ளூர் கொலை விவகாரத்தில் பகீர் வாக்குமூலம்..!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி திருவலாங்காடு கன்னிக்கோவில் குளத்தில், கடந்த 16 ஆம் தேதியன்று 30 வயது வாலிபரின் சடலம் இருந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவாலங்காடு காவல் துறையினர், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தலையில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் கொலை செய்து உடலை குளத்தில் வீசியிருக்கலாம் என்று எண்ணியிருந்தனர். 

இது தொடர்பான விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் அங்குள்ள பழையனூர் கிராமத்தை சார்ந்த வெங்கடேசன் (வயது 30), இவர் கொத்தனாராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சந்தேகத்தின் பேரில் இதே கிராமத்தை சார்ந்த கஜேந்திரன் (வயது 20) என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெங்கடேசன், கஜேந்திரனின் இல்லத்திற்கு அருகே செங்கற்களை இறக்கிக்கொண்டு இருந்துள்ளார். இதில் தூசி பறந்த நிலையில், இது குறித்து கஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் கன்னியம்மாளை தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும், தகராறு செய்துள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்து ஆத்திரமடைந்த கஜேந்திரன் கடந்த 14 ஆம் தேதி இரவு தனது நண்பன் ஜானகிராமனுடன் (வயது 25) சேர்ந்து, வெங்கடேசனை கொலை செய்து, உடலை குளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது. கஜேந்திரன் மற்றும் ஜானகி ராமனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Murder case tragedy Confessions by Criminal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->