தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு போன் பரிசு.. அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்.!
Thiruvallur District Administration Announce Android Phone Gift for Tomorrow Vaccine Scheme 3 Persons
தடுப்பூசி செலுத்துபவர்களில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆண்ட்ராயிடு போன் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிகரித்து வந்த கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கைகொடுத்தலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்துவதும் முக்கியத்துவம் ஆகியுள்ளது. இதனால் அரசு பல்வேறு வழிகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி திட்டம் மூலமாக 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் வெகுவாக வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது.
அதன்படி, தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு நாளை திருவள்ளூரில் தடுப்பூசி செலுத்துவோரில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, 3 பேருக்கும் தலா 1 ஆண்ட்ராயிடு போன் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Thiruvallur District Administration Announce Android Phone Gift for Tomorrow Vaccine Scheme 3 Persons