எதிர்காலத்தை மரத்தடியில் சிந்தித்த காதல் ஜோடி... காட்டிக்கொடுத்த டிரோன்.. தலைதெறித்து ஓடிய காதல் ஜோடி.!!
Thiruvallur couple tron camera
கரோனா வைரஸின் தாக்கமானது தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவ துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தன்னார்வலர்களும், அரசும், மக்கள் நேசிக்கும் பல நட்சத்திரங்களும் தொடர்ந்து தங்களுக்கு தெரிந்த வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
காவல்துறையினர் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் சுட்டெரிக்கும் வெயிலையும் கண்டுகொள்ளாது பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவில் வெளியே அனாவசியமாக சுற்றுவது மற்றும் பாதுகாப்பு நடைமுறையாக முகக்கவசம் அணியாமல் இருந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இணையத்தில் காவல் துறையினர் தங்களின் முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் கரோனாவால் 1,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காவல் துறையினர் டிரோன்களின் உதவியுடன் அனாவசியமா வெளியே சுற்றி திரியும் இளைஞர்களை விரட்டியடித்து வருகின்றனர்.
குமுளிப்பூண்டி காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துகொண்டு இருந்த நிலையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் காதல் ஜோடிகள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். டிரோன் கேமரா கண்காணிப்பதை கண்ட காதல் ஜோடி, அவசர அவசரமாக சம்பவ இடத்தில் இருந்து தலைதெறிக்க ஓடினர். மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruvallur couple tron camera