ஒரேநாளில் டாப்புக்கு வந்த திருவள்ளூர்.. அதிர்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று கரோனாவால் 798 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. 92 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 3,833 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,371 ஆக உயர்ந்துள்ளது. 

திருவள்ளூரில் 97 பேருக்கு நேற்று கொரோனா உறுதியாகிய நிலையில், மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உடைய நபர்களின் எண்ணிக்கையி 469 பேரில் 200 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய நபர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், மாநில அளவில் திருவள்ளூர் கரோனா பாதிப்பு அதிகமுள்ள இரண்டாவது மாவட்டமாக மாறியுள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 23 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், இக்குடியிருப்பில் 5 ஆயிரம் வீடுகள் இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur corona virus shocking update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->