திருவள்ளூர் அருகே சோகம்.. கால்வாய் நீரில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


கால்வாயில் தவறி விழுந்த சிறுவர்களின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடல் பகுதியை சார்ந்த சிறுவர்கள் விக்னேஷ் (வயது 13), விக்னேஷின் நண்பர் மோனிஷ் (வயது 11). இவர்கள் இருவரும் பூண்டி ஏரியில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாய் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். 

இதன்போது, இருவரும் கால்வாய்க்குள் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளனர். இருவரும் காப்பாற்றக்கூறி கூச்சலிடவே, இதனைக்கண்ட பொதுமக்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லாமல் போயுள்ளது. 

இதனையடுத்து, இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கால்வாயில் நீரின் ஓட்டம் அதிகமாக இருப்பதை உறுதி செய்து, பூண்டி ஏரியில் இந்துஸ் எள்ளும் இணைப்பு கால்வாயின் தண்ணீரை நிறுத்தி சிறுவர்களை தேடியுள்ளனர். 

இந்த நிலையில், தேடப்பட்ட சிறுவர்களின் உடல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு, இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Child Died on Puzhal Chembarambakkam Link Canal Slipped on River


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->