கள்ளக்காதலன் மனைவியின் கண்முன்னே கொலை.. கையும் களவுமாக சிக்கிய தம்பதி.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் தேவேந்திர சிங் (வயது 41). இவர் உத்திர பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். தனது மனைவி சாயாவுடன் (வயது 33), கடந்த 8 மாதமாக மீஞ்சூரில் வசித்து வருகிறார். 

இதே பகுதியை சார்ந்தவர் மனோஜ் (வயது 33). மனோஜிற்கும் சொந்த மாநிலம் உத்திர பிரதேசம் ஆகும். இவர்கள் மூவரும் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் பணியை செய்து வந்துள்ளனர். தேவேந்திர சிங் பணிசூழல் காரணமாக வெளிவேலைக்கு சென்று வந்த நிலையில், மனோஜிற்கும் - சாயாவிற்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் தனிமையில் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வீட்டிற்கு வந்த தேவேந்திர சிங், நேற்று முன்தினம் வெளியே சென்ற நிலையில், மனோஜ் சாயாவை தன்னுடன் வர கூறி கோரிக்கை வைத்துள்ளார். மேலும், கணவரை பிரிந்து நீ வா என்றும், நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு சாயா மறுப்பு தெரிவிக்கவே, இவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்துள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் இருவரும் நெருக்கமாக இருக்கையில் எடுத்த புகைப்படத்தை கணவரிடம் காட்டிவிடுகிறேன் என்று மிரட்டியுள்ளான். இதன்போது, எதிர்பாராத விதமாக தேவேந்திர சிங் வீட்டிற்கு திரும்பி வரவே, மனைவியுடன் மனோஜ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

பின்னர், வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து மனோஜை மனைவியின் கண் முன்னே சாராமரிக்காய்க அடித்த நிலையில், படுகாயமடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து கொலையை மறைக்க தம்பதிகள் முடிவு செய்து, மனோஜின் உடலை சாக்கில் கட்டி, நள்ளிரவு நேரத்தில் உடலை அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த தேவேந்திரசிங் நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்தார். இதையறிந்த மனோஜ், சாயா வீட்டுக்கு சென்று, நீ உன்னுடைய கணவரை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு. நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த சாயா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதிகாலை சுமார் 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் மனோஜின் உடலை எடுத்து இருவரும் திருவெள்ளைவாயில் கிராமம் அருகே செல்கையில், காவல் துறையினர் இவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயற்சித்துள்ளனர். 

இதன்போது, பதற்றத்துடன் தம்பதிகள் வேகமாக செல்வதை கண்ட காவல் துறையினர், தங்களின் வாகனத்தில் விரட்டி வாயலூர் பேருந்து நிலையம் அருகே இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரணை செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Affair Man Murder by Woman Husband Police Arrest Couple 8 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->