சரக்கு கேட்ட இளைஞர்கள்.. அறிவுரை கூறிய கூலித் தொழிலாளி.. ஓடஓட வெட்டி கொடூர கொலை.. பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள்.!!
thirupur man killed police investigation
திருப்பூர் மாவட்டத்தில் மது எங்கே கிடைக்கும்? என்று கேட்ட இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய கூலித் தொழிலாளியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தென்னம்பாளையம் பகுதியில் இந்த சம்பவம் கடந்த ஐந்தாம் தேதி என்று நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் மது அருந்த ஆசைப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு தெரிந்த இடத்தில் மதுபானம் குறித்து கேட்டு, மது இல்லாததால், அங்குள்ள தென்னம்பாளையம் பகுதியில் ஒரு கூலித்தொழிலாளியை பார்த்து மது கிடைக்குமா? என்று கேட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட கூலித்தொழிலாளி அந்த இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அவரை ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
thirupur man killed police investigation