கடன் கொடுத்தவனுடன் கள்ளக்காதல்.. கல்யாண ஆசையில் தெருவை அலறவிட்டு அரங்கேறிய கொடூர சம்பவம.!!
Thiruppur illegal affair girl murder police investigation
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் கொடுமுடி பகுதியை சார்ந்தவர் யுவராஜ் (வயது 37). இவரது மனைவி சங்கீதா (வயது 33). இவர் பியூட்டி பார்லர் நடத்தி வரும் நிலையில், இவர்களுக்கு 10 வயதுடைய மகன் மற்றும் 5 வயதுடைய மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், இதே பகுதியை சார்ந்த விவேக் (வயது 28) என்ற வாலிபர் பைனான்ஸ் தொழில் செய்து வரும் நிலையில், விவேக்கிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
விவேக்கிடம் சங்கீதா தனது பியூட்டி பார்லரை விரிவாக்க பணம் வாங்கியுள்ள நிலையில், இவர்களிடம் ஏற்பட்ட பழக்கம் நட்பாக தொடர்ந்த நிலையில், அடிக்கடி சங்கீதாவின் பியூட்டி பார்லருக்கு பணம் வாங்க சென்றுள்ளார். இதனையடுத்து இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த சமயத்தில், விவேக் சங்கீதாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு, தனது விருப்பத்தை சங்கீதாவிடம் தெரிவித்த நிலையில், இதற்கு சங்கீதா சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், நேற்றிரவு சங்கீதாவின் இல்லத்திற்கு விவேக் செல்லவே, கதவை யுவராஜ் திறந்துள்ளார். யுவராஜை கடுமையாக அடித்து தாக்கிய விவேக் பிரச்சனை செய்யவே, கணவரின் அலறல் சத்தம் கேட்டு சங்கீதா விரைந்துள்ளார்.
சங்கீதாவை ரூமில் தள்ளிய விவேக், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதை அடுத்து, ஆத்திரமடைந்த விவேக் சால்பாக் மாத்திரையை சங்கீதாவின் வாயில் திணித்துள்ளான். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னலை உடைத்த சமயத்தில், சங்கீதா மயக்கமான நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து சங்கீதாவை மருத்துவமனைக்கு மீட்டு கொண்டு சென்ற நிலையில், சங்கீதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சங்கீதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், விவேக் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விவேக்கை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Thiruppur illegal affair girl murder police investigation