பெண் காவல் அதிகாரியின் கைகளை முறித்த கஞ்சா வியாபாரி.. பாத்ரூம் பாசத்தால் வழுக்கி விழ வாய்ப்பு?..!!
Thirupathur police arrest kanja sales lady
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வரும் பெண்மணி மகேஸ்வரி. இவர் தற்போது எரிசாராயம் மற்றும் கஞ்சா வியாபார தொழிலை குடும்பத் தொழிலாக செய்து வரும் நிலையில், காவல்துறை அதிகாரியின் கையை ஒடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாணியம்பாடி பகுதியியல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நிலையில், குடும்பத்தினருடன் சேர்ந்து காவல்துறை அதிகாரிகளை தாக்கிய மகேஸ்வரி, அவரை பிடிக்க முயன்ற சூர்யா என்ற பெண் காவல்துறை அதிகாரியின் கையை முறித்துள்ளார்.
இதனையடுத்து துப்பாக்கி முனையில் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகேஸ்வரியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சா மற்றும் ரூபாய் நோட்டுகள் என மொத்தமாக ரூ.20 இலட்சத்தை கைப்பற்றியுள்ளனர். போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மகேஸ்வரியின் சொத்துக்கள் அரசுடைமையாகும் என்பதால், அவரது வீட்டில் இருந்த 40 வீட்டு பத்திரங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், பிற சொத்துகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகேஸ்வரியின் வீட்டில் இருசக்கர விலையுயர்ந்த வாகனம் மற்றும் கஞ்சா, சாராயம் என போதை பொருட்கள் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. மகேஸ்வரி ரவுடியாக வலம் வந்த நிலையில், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை தாக்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக காவல் அதிகாரியை கடித்து விட்டு, வீட்டிற்குள் பூட்டி வைத்து தப்பி சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கைதாகியுள்ள மகேஸ்வரி வெளியே வர இயலாத வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார் என்று அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், மகேஸ்வரி மற்றும் அவரது கூட்டாளிகள் விரைவில் கழிவறையில் வழுக்கி விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thirupathur police arrest kanja sales lady