பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்.. 2 மணிநேரத்தில் மீட்ட திருப்பத்தூர் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில், பெண்ணொருவர் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. 

மேலும், கடத்தலில் ஈடுபட்ட பெண்மணி சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தன்னை உனது சகோதரின் தோழி என்று அறிமுகம் செய்து, அக்கா வெளியே இருக்கிறார், குழந்தையை காட்டிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார். 

இதனை நம்பிய பெண்மணியும் குழந்தையை கொடுக்கவே, பெண் சிறுது நேரத்தில் மாயமாகியுள்ளார். இதன்பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை சோதனை செய்து, திருப்பத்தூர் காவல் துறையினருக்கு முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்கு பின்னர், பெண்மணி அங்குள்ள ஹன்சா நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து குழந்தையும் மீட்கப்பட்டு, தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விசயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathur child kidnap police rescue in 2 hrs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->