நீர்தேங்கிய பள்ளத்தில் விழுந்து சிறுவன் பரிதாப பலி.. வாணியம்பாடியில் சோகம்..!!
Thirupathur child died in digging land water police investigation
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி கிராமத்தை சார்ந்த சிறுவன் ஹரிஷ் (வயது 7). சிறுவன் ஹரிஷின் தந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், சிறுவன் தனது தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளான்.
தற்போது விடுமுறை காரணமாக வீட்டிலேயே இருக்கும் நிலையில், அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் இருக்கும் காலி இடத்தில் விளையாடி வந்துள்ளான். இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகே பெரிய பள்ளம் இருக்கிறது. இந்த பள்ளம் மழை காரணமாக நிரம்பி காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று வழக்கம்போல விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த தாய் அப்பகுதிக்கு சென்று பார்க்கவே, சிறுவன் காணவில்லை. இதனையடுத்து மகனை அங்குள்ள பகுதியில் தேடவே, சிறுவன் நீர்த்தேக்க பகுதியில் விளையாண்டதாக சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தாய் மற்றும் உறவினர்கள் தேடுகையில் சிறுவன் அந்த பள்ளத்தில் விழுந்து மூழ்கி இருப்பது தெரியவந்தது. சிறுவனை மீட்டு வாணியம்பாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Thirupathur child died in digging land water police investigation