நெல்லை : கதறி அழும் பெற்றோர்கள்., உயிரிழந்த மாணவர்களின் விவரங்கள் வெளியீடு.! சோகத்தில் தமிழகம்.!
thirunelveli school accident
நெல்லை டவுன் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும், 3 மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்கள் வெளியிடப்படாததால், பள்ளி வளாகத்தின் முன்பு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் சற்று முன்பு இருந்த மாணவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,
சதிஷ் - ஆறாம் வகுப்பு சி,
விஸ்வயஞ்சன் - எட்டாம் வகுப்பு ஏ,
அன்பழகன் - ஒன்பதாம் வகுப்பு பி, இந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெற்றோர்கள் தரப்பிலும் மாணவர்கள் தரப்பிலும் வைக்கக் கூடிய மிகப் பெரிய குற்றச்சாட்டு என்னவென்றால், விபத்து நடந்தவுடன் பள்ளியின் ஆசிரியர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடுவில்லை.
உடனடியாக ஆசிரியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தால் மாணவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
English Summary
thirunelveli school accident