மதுக்கடை திறப்பு எதிரொலி.. போதையில் அரங்கேறிய கொடூர சம்பவம்.. இரத்த வெள்ளத்தில் சரிந்த தாய்.!!
thirunelveli mother murder by son police investigation
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் மேலத்தெரு பகுதியை சார்ந்தவர் ஜெயமணி (வயது 62). இவரது கணவரின் பெயர் இராஜாமணி. இவர்களுக்கு ராஜன் (வயது 40) என்ற மகன் மற்றும் 4 பெண்கள் உள்ளனர். இந்த நிலையில், 3 பெண்களுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று முடியவே, கடைசி பெண் செட்டிகுளம் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஜெயமணி தனது கடைசி பெண் மற்றும் திருமணம் முடிந்த மற்றொரு மகளின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால், இவர்களுடன் வசித்து வந்துள்ளார். ராஜன் டெய்லராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி மற்றும் 3 குழந்தையுடன் செட்டிகுளம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
தற்போது 40 நாட்கள் கழித்து மதுபான கடைகள் திறக்கப்பட்ட நிலையில், ராஜன் மதுவாங்கி வந்து குடித்துள்ளான். மேலும், மது போதையிலேயே தனது தாயாரின் வீட்டிற்கு சென்று வீட்டை தன் பெயரில் எழுதி வைக்க கூறி பிரச்சனை செய்துள்ளான்.
ஜெயமணி இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த ராஜன் வீட்டில் இருந்த அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளான். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக ஜெயமணி உயிரிழந்துள்ளார். இதனைக்கண்ட ஜெயமணியின் மகள்கள் அலறவே, அக்கம் பக்கத்தினர் விரிந்து வந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஜெயமாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜனை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
thirunelveli mother murder by son police investigation