இந்த இடமே என்னுடையது! தண்ணி தொட்டி மீது ஏறிய கணேசன்!
thirunelveli man suicide protest for land issue
திருநெல்வேலியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்த இடம் தன்னுடையது என்று கூறி, அந்த நீர்த்தேக்க தொட்டியின் மீதே ஏறி தற்கொலை விடுத்த நபரை, சுமார் ஒரு மணி நேரம் போராடி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள இடம் தனக்கு சொந்தம் எனக்கூறி மேலப்பாளையத்தை சேர்ந்த ஏசி மெக்கானிக் கணேசன் (வயது 46) என்பவர் இன்று காலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேலே ஏறி தான் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தது போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அவருடன் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர், பின் போலீசாரும் சமாதானம் கூறி அவரை மீட்டனர். இந்த தற்கொலை மிரட்டல் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
thirunelveli man suicide protest for land issue