ஆற்றங்கரையில் கள்ளக்காதல் ஜல்சா.. சரமாரியாக கூறுபோட்டு சம்பவம் செய்த கணவன்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சார்ந்தவர் பொன் இசக்கி (வயது 55). இவர் திருநெல்வேலியில் தேநீர் கடையில் பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவியின் பெயர் முத்துலட்சுமி (வயது 50). இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மூன்று மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் திருமணம் முடிந்து திருப்பூரில் கணவருடன் வசித்து வருகிறார். 

மீதமுள்ள இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடியாத நிலையில், வண்ணாரப்பேட்டையில் இவர்கள் வசித்து வந்தனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்னதாக மணிமூர்த்தீஸ்வரம் பகுதிக்கு சென்றுள்ளனர். முத்துலெட்சுமிக்கும், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வரும் அவரது உறவினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளார். 

இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், அடிக்கடி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் இசக்கிக்கு தெரியவரவே, இசக்கி இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் கள்ளக்காதலை கைவிடாத நிலையில், கணவன் - மனைவிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் முத்துலட்சுமி ஆற்றுக்கு துணிகளை துவைத்துவிட்டு, குளித்து மீண்டும் வீட்டிற்க்கு வந்த நிலையில், இசக்கிக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கி முத்துலெட்சுமியை சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

இசக்கி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில், இந்த விஷயம் தொடபிராக காவல் துறையினர் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இசக்கியை தேடி வந்த நிலையில், இசக்கி தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இசக்கியிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunelveli illegal affair girl murder by his husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->