இரண்டாக பிரிக்கப்பட்ட மாவட்டம்..! வெளியான அரசாணை.!! எந்த தாலுகா எந்த மாவட்டம்?..!!
thirunelveli district converted two district
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை அந்தந்த மாவட்டங்களில் வளர்ச்சிக்காக மாவட்டங்களைப் பிரித்து தற்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது.
அந்த வகையில்., வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது., இதனைப்போன்று மேலும் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அரசாணை தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தது.
இதனைப்போன்று இன்னும் சில மாவட்டங்கள் பிரிப்பதற்கான பணியில் இருக்கும் நிலையில்., திருநெல்வேலி மாவட்டத்தினை இரண்டாக பிரித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில்., திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை., பாளையங்கோட்டை., மானூர்., நாங்குநேரி.. சேரன்மாதேவி., ராதாபுரம்., அம்பாசமுத்திரம் மற்றும் திசையன்விளை தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி., சங்கரன்கோவில்., செங்கோட்டை., கடையநல்லூர்., சிவகிரி., வி.கே புதூர்., திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தில் செயல்பட உள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
thirunelveli district converted two district