திமுகவுடன் கூட்டணி தொடரும்., கூட்டணி கட்சி தலைவரின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது தமிழகத்தில் விடப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக- காங்கிரஸ் உடன் விசிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

அதில், ஒரு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிட்டனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தை கட்சி வெற்றி பெற்றது .

இதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியை தொடர்ந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள்,உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruma say we continue with dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->