வளர்த்த கிடா பாஞ்சா தாங்கலாம்., மாடே பாஞ்சா என்னாவது.?- திண்டுக்கல்லில் சோகம்.!
thindukal incident for farmer
திண்டுக்கல்லில் வளர்த்த காளையே வளர்த்தவரை குத்தி கொல்லப் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஐயர்மடம் என்ற பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்ற விவசாயி தன்னுடைய வீட்டில் பசுக்களையும் மற்றும் ஒரு காளைமாட்டையும் ஆசையோடு வளர்த்து வந்துள்ளார். பல வாருடங்களாக வளர்த்து வரும் அந்த காளை மீது தனிப்பட்ட அக்கறை கொண்டு இருந்தார் மணிவேல்.
இந்நிலையில், நேற்று மாலை மணிவேல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபொழுது அவரது காளையாது முரண்டு பிடித்து இருக்கின்றது, எனவே மணிவேல் அதன் அருகில் சென்று சமாதானப்படுத்த முயன்றுள்ளார். உடனே அவரை வயிற்றிலும், மார்பிலும் அந்த காளை குத்தியுள்ளது.
இதன் காரணமாக ரத்தம் வழிந்து கொண்டிருந்தது, ஆனால், காளை அவரை விடாமல் மீண்டும் குத்திகொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணிவேலின் மகன், உயிரைப் பணயம் வைத்து தந்தைக்காக காளையிடம் சென்று அதனை அடக்கி விரட்டி விட்டு தனது தந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்து இருக்கின்றார்.
English Summary
thindukal incident for farmer