மாடி விட்டு மாடி தாவி மண்டை உடைந்து கிடந்த திருடர்.! விசாரணையில் வெளியான சோக சரித்திர தகவல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மயிலாடுதுறை அருகே திருடன் ஒருவன் திருட சென்ற போது வீட்டு மாடியில் இருந்து கொள்ளையன் ஒருவன் தவறி விழுந்து பலியான சம்பவம் நடந்திருக்கிறது.

நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு., பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் நிறைய இடங்களில் திருடுவதை தொழிலாக செய்து வருகிறார். இரவு நேரங்களில் பல வீடுகளில் ஏறி குதித்து திருடி இருக்கிறார். இதனால் இவர் மீது பல கொள்ளை சம்பவங்களில் வழக்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் நேற்று இரவு அவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்திருக்கிறார். அந்த வீட்டை தொடர்ச்சியாக கவனித்து வந்த அவர், நேற்று இரவு அங்கு திருட சென்றிருக்கிறார். இதற்காக ராஜலக்ஷ்மி என்பவற்றின் வீட்டு மாடியில் இருந்து இன்னோரு வீட்டின் மாடிக்கு தாவியுள்ளார்.

அந்த சமயம் திடிரென்று நிலைதடுமாறிய மணி தவறி கீழே விழுந்திருக்கிறார். 15 அடி உயரமுள்ள வீட்டின் மாடியில் இருந்து விழுந்ததால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளர்கள், ரத்த வெள்ளத்தில் ஒருவர் பலியாகிக்கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, இறந்து கிடந்த மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டன் மீது ஏற்கனவே கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thief dead in robbery place


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->