தமிழ்நாட்டில் சத்ரிய இந்துக்களே கிடையாது! சூத்திர இந்துக்கள் தங்களை சத்திரியர்கள் என சொல்லிக் கொள்கின்றனர்!
There are no Satriya Hindus in Tamil Nadu Sudra Hindus call themselves Satriyas
பார்ப்பன இந்துக்களுக்காக சத்திரிய வைசிய சூத்திர இந்துக்கள் சேவை செய்கின்றனர்!
விழுப்புரத்தில் நடைபெற்ற இருளர் மனித உரிமை மாநாட்டில் கலந்து கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்துக்கள் குறித்தும் வர்ணாசிரமம் குறித்தும் அந்த மாநாட்டில் பேசினார்.
அதில் திருமாவளவன் பேசியதாவது "ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருக்கக் கூடியவர்கள் சட்டத்தை மதிக்க கூடியவர்களா? தமிழக அரசை மதிக்க கூடியவர்களா? அவர்களுக்கு ஏன் இங்கு அந்த அளவிற்கு பாதுகாப்பு உள்ளது?
பாதுகாப்பு பற்றி சூத்திர இந்துக்கள், சத்திரிய இந்துக்கள், வைசிய இந்துக்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் பார்ப்பன இந்து பாதுகாப்பாக இருப்பதற்கு இந்த மூன்று வகை இந்துக்களும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். தலித்துகளும் பழங்குடி மக்களும் அவர்கள் பார்வையில் கீழானவர்கள், வேலை செய்ய வேண்டியவர்கள், அடிமைகள், எதிர்த்து கேள்வி கேட்டால் தாக்கப்பட வேண்டியவர்கள், மீதி செயல்பட்டால் கொலை செய்யப்பட வேண்டியவர்கள்.
அவர்களைப் பொறுத்தவரை இந்துக்களில் நான்கு வகைகளில் உள்ளனர். இன்று ஓட்டுக்காக நாம் அனைவரும் இந்து என்று சொல்லி கொண்டுள்ளனர். வர்ணாசிரமபடி சொல்லப்படும் இந்துக்களில் பழங்குடியினரும் கிடையாது தலித்களும் கிடையாது. இவர்கள் உழைத்து வாழ்வதே அறமாகக் கொண்டு வாழ்பவர்கள். வாரணாசிரமம் சொல்லும் நான்கு இந்துக்களில் தமிழ்நாட்டில் பிராமண இந்துக்கள் ஐயர் மற்றும் ஐயங்கார் இருக்கின்றனர்.
சத்திரிய இந்து என்பவர்கள் நாங்கள் தான் எனவும் நாங்கள் ஆண்ட பரம்பரை எனவும் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் யாருமே சத்ரிய இந்துக்கள் கிடையாது. வட இந்தியாவில் தாகூர், ராஜ்புட், பட்டேல் போன்ற சில சத்திரியர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் அப்படி யாரும் கிடையாது என்பதை தான் ஆய்வு சொல்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சூத்திர இந்துக்கள் தங்களை சத்ரிய இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
வைசிய இந்துக்கள் வியாபாரம் செய்பவர்கள், சூத்திர இந்துக்கள் விவசாயம் செய்பவர்கள். விவசாயம் செய்யக்கூடிய உடல் உழைப்பில் வாழக்கூடியவர்களுக்கு தான் சூத்திர இந்துக்கள் என்று பெயர். இந்த நான்கு வகை இந்துக்களை தவிர குறவர்கள், மலைவாழ் மக்கள், இருளர்கள் இதுபோன்ற பழங்குடி சமூகத்தினர் தமிழ்நாட்டில் ஒரு சதவீதம் உள்ளனர் என பேசினார்.
இவ்வாறு திருமாவளவன் பேசிக் கொண்டு இருக்கும் பொழுதே மின்தடை ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு உண்டானது.
English Summary
There are no Satriya Hindus in Tamil Nadu Sudra Hindus call themselves Satriyas