திருமணம் முடிந்த தோழி வீட்டிற்கு சென்று, விடுகதையான தேனி இளைஞர்.. தேடும் காவல்துறை.!!
Theni Youngster Missing police investigation
தேனி மாவட்டத்தில் உள்ள போடி காமராஜபுரம் பகுதியை சார்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது 24). இவர் டிப்ளமோ கேட்டரிங் பயின்று முடித்துவிட்டு, கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ரிங் ரோடு பகுதியை சார்ந்த 25 வயது பெண்மணிக்கு இடையே முகநூல் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண்மணிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்களுக்குள் முதலில் நட்பு ரீதியாக ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து விக்னேஸ்வரன் திருப்பூருக்கு சென்று தனது தோழியை சந்தித்து வந்துள்ளான். இந்நிலையில், தற்போது ஊரடங்கு அமலாகியிருந்த சூழலிலும், கடந்த ஜூன் 29 ஆம் தேதி திருப்பூருக்கு சென்றதாக தெரியவருகிறது.
தனது தோழியின் இல்லத்தில் நீண்ட நேரம் விக்னேஸ்வரன் பேசிக்கொண்டு இருப்பதை, அக்கம் பக்கத்தினர் கண்டுவிடவே, அங்கிருந்து அவர் ஓட்டம் பிடித்துள்ளார். இதன்பின்னர் தேனிக்கோ அல்லது கோவையில் பணியாற்றும் இடத்திற்கோ செல்லவில்லை. நண்பர்களின் இல்லத்திற்கு சென்ற மகன் விரைவில் வந்துவிடலாம் என்று பெற்றோர்கள் எண்ணியிருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இதனையடுத்து விக்னேஸ்வரனின் சித்தப்பா செல்வபாண்டி, அங்குள்ள வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விக்னேஸ்வரன் தனது தோழியை சந்தித்த பின்னர், அலைபேசி அணைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், பொதுமக்கள் பார்த்துவிட்டதால், தப்பியோடும் போது பாறைக்குழியில் விழுந்தாரா? என்பது தொடர்பான விசாரணையும் நடைபெற்று, அவரது உடலை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Theni Youngster Missing police investigation