சொந்த மகளுக்கு மதுஊற்றி கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த காமுக தந்தை.. தேனியில் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வருசநாடு பகுதியை சார்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக மனைவியை இழந்து, தனது 4 வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், இரண்டாவதாக மற்றொரு பெண்மணியை திருமணம் செய்துகொண்ட நிலையில், பாலமுருகனும் - இரண்டாவதாக மணம்முடித்த பெண்மணியும் வாய்பேச இயலாதரவர்களாக இருந்த நிலையில், இரண்டாவது மனைவிக்கும் - பாலமுருகனிற்கும் குழந்தை இல்லை. 

அந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், கணவன் - மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்மணி, பாலமுருகனை விட்டுவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், காமுகன் தனது மகளுக்கு மதுபானத்தை வழங்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். 

தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் சிறுமி அலங்கோலமாய் இருந்த நிலையில், காமுகன் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளான். சிறுமி இதனை பயத்தால் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்த நிலையில், நாளடைவில் தொந்தரவு அதிகரித்துள்ளது. 

இதனையடுத்து சிறுமி இது குறித்து சித்தியிடம் தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த இரண்டாவது மனைவி அங்குள்ள வருசநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையேற்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு காமுகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Varusanadu Child girl sexual abuse by Father police arrest culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->