தீராத வயிற்று வலியால் அவதி.. 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.!
Theni Varusanadu 5 Month Pregnant girl Rohini Suicide and Death due to Stomach Pain
தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு முருக்கோடை கிராமத்தை சார்ந்தவர் வீரணன். இவரது மகள் ரோகினி (வயது 19). வருசநாடு அருகேயுள்ள உருட்டிமேடு பகுதியை சார்ந்தவர் வல்லரசு.
ரோஹிணிக்கும் - வல்லரசுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், ரோகினி 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதமாக தீராத வயிற்று வலி காரணமாக அவதியுற்றுள்ளார்.
வயிற்று வலிக்காக பல்வேறு இடங்களில் சென்று சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரோகினி, நேற்று மாலை வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வருசநாடு காவல் துறையினர், ரோகிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Theni Varusanadu 5 Month Pregnant girl Rohini Suicide and Death due to Stomach Pain