குழந்தையை வளர்க்க விருப்பமில்லாமல் தந்தை செய்த சோக செயல்.. உறவினருடன் கம்பி எண்ணும் பரிதாபம்.!
Theni Usilampatti Father Gives Baby on Sivaganga GH Says Lie 14 June 2021
தேனி மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி எருமைப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சுபாஷினி. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதிகள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் ஆறு மாத பெண் குழந்தையை ஆனந்தகுமார் வளர்த்து வரும் நிலையில், பெண் குழந்தையை விருப்பமில்லாமல் அவர் வளர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், உறவினர் உதவியுடன் சிவகங்கை மருத்துவக்கல்லூரிக்கு சென்ற ஆனந்தகுமார், காரில் நாங்கள் வரும்போது சாலையில் குழந்தை அழுதுகொண்டே இருந்ததாக கூறி குழந்தையை ஒப்படைத்துள்ளார்.
இதுதொடர்பான தகவல் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குழந்தையை கொண்டு வந்த ஆனந்தகுமார் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இந்த குழந்தை ஆனந்தகுமாரின் குழந்தை என்பது உறுதியானது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனைவியை பிரிந்து குழந்தையுடன் வாழ்ந்துவரும் நிலையில், குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாததால் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துச் சென்றால் யாராவது வளர்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் பொய்யான காரணத்தை கூறி குழந்தையை ஒப்படைத்து தெரியவந்துள்ளது.
தவறான காரணத்தை கூறி குழந்தையை ஆனந்தகுமார் ஒப்படைத்தால், ஆனந்தகுமார் மற்றும் அவருடன் வந்தவரை கைது செய்த காவல் துறையினர், தலைமறைவான பெரியசாமி என்பவரை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Theni Usilampatti Father Gives Baby on Sivaganga GH Says Lie 14 June 2021