#BREAKING: தேனியில் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சற்றுமுன் உயிரிழந்தது.! பெரும் சோகத்தில் தமிழக மக்கள்.!
theni thamaraikulam bay death
தேனி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தாட்கள் நகர் பகுதியை சார்ந்தவர் இடல் ராஜா. இவரது மனைவி ஆரோக்கிய மேரி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஆரோக்கிய மேரி கர்ப்பிணியாக இருந்து உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, வீட்டிலேயே பனிக்குடம் உடைந்துள்ளது. இதனையடுத்து, குடும்பத்தினர் ஆரோக்கிய மேரியை தேனி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பிரசவத்திற்காக அனுமதி செய்துள்ளனர்.
நள்ளிரவில் அனுமதி செய்யப்பட்ட ஆரோக்கிய மேரிக்கு நேற்று அதிகாலை 03.30 மணியளவில் குழந்தை 700 கிராம் எடையுடன் பிறந்துள்ளது. இதனால் சிறிது நேரத்திலேயே குழந்தை சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக, மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு அதற்கான தகவலும் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
காலை 08.30 மணியளவில் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டு, குழந்தையின் உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், கிருஸ்துவ முறைப்படி குழந்தையின் உடலை அடக்கம் செய்ய கல்லறைக்கு எடுத்து சென்றுள்ளனர். அப்போது, குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக குழந்தையின் உடலில் உயிர் இருப்பது போன்ற அறிகுறி தென்பட்டுள்ளது.
இதனால் இன்ப அதிர்ச்சியில் செய்வதறியாது ஒருகணம் திகைத்துப்போன குடும்பத்தினர், குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதி செய்தனர்.
இந்த குறித்து தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் தெரிவிக்கையில், " குழந்தை குறைமாதத்தில் பிறந்த குழந்தை என்பதால், சுவாச பிரச்சனை ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தவறுகள் நடந்து இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ விஷயங்களில் மக்களை சில இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளது. ஆகையால், அதனைப்போன்றதொரு அதிஷ்டத்தில் குழந்தை உயிர்பிழைத்திருக்க வாய்ப்புகளும் உள்ளது. விசாரணைக்கு பின்னர் உண்மை தெரியவரும் " என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெருவந்த குழந்தை சிகிச்சை பலனின்றி மீண்டும் உயிரிழந்துள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
theni thamaraikulam bay death