விரும்பி, வெதும்பி செய்த காதல்.. லவ்வை சொன்னவருக்கு தலையில் இறங்கிய இடி.. அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.ராஜகோபாலன்பட்டி கிராமத்தை சார்ந்தவர் சுப்பையா. இவரது மகன் வெள்ளைச்சாமி. இவர் ஐ.டி.ஐ பயின்று முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். 

இந்நிலையில், வெள்ளைச்சாமி, இதே ஊரை சார்ந்த பெண்மணியை கடந்த சில மாதமாக ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணிடம் காதலை தெரிவித்துள்ளார். ஆனால், அதே பெண்மணி ஏற்கனவே மற்றொரு நபரை காதலித்து வந்துள்ளார். 

இந்த விஷயத்தை தனது ஒருதலைகாதலியின் வாயில் இருந்து கேட்டதும், வெள்ளைசாமிக்கு இடையே தலையில் வீழ்ந்தார் போல இருந்துள்ளது. இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்த வெள்ளைச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வெள்ளைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Suicide due to one side love Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->