முகக்கவசம், தலைக்கவசம் அணியாமல் வந்த காவலருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் - தேனி எஸ்.பி அதிரடி.!
Theni SP Penalty to Police Constable Roaming Without Facemask and Helmet 25 May 2021
தமிழகத்தில் மே மாதம் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ உதவிகளை தவிர்த்து, பிற எந்த காரணத்திற்கும் மக்கள் வெளியே வரக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல்துறையினரும் மாவட்ட அளவிலான எல்லைகளை மூடி, மாவட்ட அளவிலான பயணங்களை மேற்கொள்வோரிடம் உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என சோதனை செய்து வருகின்றனர். மேலும், மாவட்டங்களுக்கு உள்ளே செல்லும் பயணத்திற்கும் காவல்துறையினர் கண்காணிப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தேனியில் மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்த காவல் அதிகாரிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், காவல் அதிகாரியின் வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டு அதிரடி காண்பித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Theni SP Penalty to Police Constable Roaming Without Facemask and Helmet 25 May 2021