வளைகாப்பு முடிந்ததும் மூச்சுத்திணறி துடித்துடித்து உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணி..!!
Theni Pregnant Woman Died After Completed Valaikappu Festival 15 May 2021
தேனி மாவட்டத்தில் உள்ள போடி சந்தைப்பேட்டை பகுதியை சார்ந்தவர் தியானேஸ்வரன் (வயது 22). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள கும்பிநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் கவுசல்யா (வயது 22).
இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கையிலேயே காதலித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது கவுசல்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.
வீட்டில் இருந்த கவுசல்யாவிற்கு அடிக்கடி மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்படவே, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.
இந்நிலையில், கவுசல்யாவிற்கு வளைகாப்பு விழா நடந்த நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் கவுசல்யாவை அவரது பெற்றோர் தங்களின் இல்லத்திற்கு அழைத்து செல்ல நினைத்த நிலையில், சில நிமிடங்களுக்கு உள்ளாகவே மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்குள்ள போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதி செய்த நிலையில், மேல் சிகிச்சைக்காக உடனடியாக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திருமணம் முடிந்து 3 வருடங்கள் மட்டுமே ஆவதால் உத்தமபாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Theni Pregnant Woman Died After Completed Valaikappu Festival 15 May 2021