#Breaking: கர்ப்பிணி மனைவியை சிசுவுடன் கொலை செய்த கணவன்.. சாகும் வரை தூக்கிலிட, தேனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியை சார்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ். இவரது மனைவி கற்பகவல்லி. கற்பகவல்லி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், மனைவியின் மீது சுரேஷிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

இதனால் தம்பதிகள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கொடூரன், மனைவியை ஆறு மாத கர்ப்பிணி என்றும் பாராது அடித்து சிசுவை கொலை செய்து, அதன் மூலமாக மனைவியை கொலை செய்துள்ளான். 

இந்த விஷயம் தொடர்பாக தேனி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பான பிற விசாரணை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. 

இன்று நீதிபதி அப்துல் காதர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகையில், வழக்கை விசாரணை செய்த நீதிபதி, கருச்சிதைவுக்கு ஆளாக்கி குழந்தை மற்றும் மனைவியை கொலை செய்த சுரேஷை சாக்கும் வரை தூக்கிலிட வேண்டும் என்றும், ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni man Murder his Pregnant Wife due to Doubt Theni District Court Judgement Death Sign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->