கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொடூரக்கொலை.. கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து பதைபதைப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள குள்ளகவுண்டன்பட்டி யூனியன் பள்ளி பகுதியை சார்ந்தவர் அருண்குமார் (வயது 36). இவர் கம்பத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். தேனியில் உள்ள அல்லிநகரம் பகுதியை சார்ந்தவர் வைஷ்ணவி (வயது 25). இவர்கள் இருவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தனிஷிகா என்ற 7 வயது பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில், அருண் குமார் கழுத்தில் காயத்துடன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அருண்குமாரின் உறவினர்கள் கூடலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மனைவி வைஷ்ணவி முரணான பதில் தெரிவித்தார். பின்னர், முழுமையான விசாரணையில் உண்மை வெளியானது. 

வைஷ்ணவிக்கும் - இதே ஊரை சார்ந்த குபேந்திரன் என்பவரின் மகன் ஜெயசந்திரன் (வயது 26) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில், கள்ளக்காதல் ஜோடி உல்லாசமாக இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் அருண்குமாருக்கு தெரியவரவே, அவர் மனைவியை கண்டித்துள்ளார். 

இதனால் கள்ளக்காதல் ஜோடி அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில், நேற்று கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வைஷ்ணவி ஜெயச்சந்திரனை அழைத்து வீட்டிற்கு வரவழைத்து அருண்குமாரை கொலை செய்தது அம்பலமானது. கள்ளக்காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Husband Arun Kumar Murder by Wife Vaishnavi and his affair boy Jaya Chandran 25 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->