படிப்பிற்கு வைத்திருந்த பணம்... ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்க உதவி செய்த தேனி மாணவி.!!
Theni girl use education money to give food poor peoples affected lockdown
தமிழகத்தில் இருந்து விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற ஆசையுடன் படித்து வந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனி மாவட்டத்தை சொந்தமாகக் கொண்டவர். கீர்த்திகா தனது படிப்பிற்கு கிடைத்த பணத்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்கள் வழங்கி வந்துள்ளார்.
தேனியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்த மாணவி உதயகீர்த்திகா, விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்து குறிக்கோளாக வைத்துக்கொண்டுள்ளார். இதனையடுத்து உக்ரைன் நாட்டில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்த நிலையில், அவரிடம் பணம் இல்லாத காரணத்தால் அவரால் மேற்படி படிக்க இயலவில்லை.
இந்த விஷயம் தொடர்பான தகவல் செய்திகளில் வெளியான நிலையில், தமிழகத்தில் இருந்து அவருக்கு படிக்க நிதி குவிந்தது. இதனையடுத்து தனது முதல் கட்ட படிப்பை முடித்த நிலையில், இரண்டாம் கட்ட படிப்பை டெல்லியில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்துக்கு சென்று மேற்கொள்ள இருந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக டெல்லி செல்ல முடியாமல் தடைபட்ட நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலையில்லாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு உணவளிக்க தனக்கு கிடைத்த பணத்தை பயன்படுத்தியுள்ளார். தனக்கு கிடைத்த பணத்தில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மாவட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார். அவரது மனதை தேனி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Theni girl use education money to give food poor peoples affected lockdown