காதல் திருமணம் செய்த மகள்.. போஸ்டர் அடித்து, பால் ஊற்றி தலைமூழ்கிய தந்தை..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால். இவர் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் கீர்த்தனா. ஃபேஷன் டிசைனிங் பயின்றுள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், கீர்த்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. 

இவர்களின் திருமணம் செப்டம்பர் 2-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஜெயபால் அழைப்பிதழை கொடுத்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், ஆகஸ்ட் 28 ஆம் தேதி பால் வாங்கி வருவதாக வீட்டை விட்டுக் கிளம்பிய மணப்பெண் கீர்த்தனா, அதற்குப் பின்னர் வீடு திரும்பவில்லை. 

இதனையடுத்து, பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளையில், கீர்த்தனா வேப்பம்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. 

இது கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால் தனது மகள் கீர்த்தனா இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடித்து, ஊர் முழுவதும் ஒட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Father create poster daughter death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->