அலர்ட் கொடுத்த வாகன ஓட்டிகள்.. கனப்பொழுதில் உயிர் தப்பிய 4 பேர்..!
Theni Car Fire Accident Police Investigation
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பகுதியை சார்ந்தவர் சிவகுமாரி, லோகேஷ். இவர்கள் இருவரும் தங்களின் உறவினருடன் ஆண்டிபட்டிக்கு காரில் சென்றுள்ளனர். காரினை லோகேஷ் இயக்கிய நிலையில், இவர்களின் கார் குன்னூர் சுங்கச்சாவடி அருகே சென்றுள்ளது.
இதன்போது, திடீரென கார் தீப்பற்றி எரிய துவங்கியுள்ளது. காருக்கு பின்னால் வந்த வாகன ஓட்டிகள், காரை விரட்டி சென்று தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காரினை நிறுத்திவிட்டு நால்வரும் வெளியே வந்த சில நிமிடத்திற்கு உள்ளாகவே கார் முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து இது தொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால், கார் முற்றிலும் எரிந்து சாம்பலானாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Theni Car Fire Accident Police Investigation