காதல் திருமணம் காவல் நிலையத்தில் பிரிவு.. தற்கொலைக்கு முயற்சித்த மச்சானை குத்திப்போட்ட பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


காதல் மனைவியை பிரிந்த விரக்தியில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை, மருத்துவமனையில் சந்திக்க சென்ற பெண்ணின் சகோதரர் கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி நாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் வேல்முருகன் (வயது 25). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, திருப்பூரில் பணியாற்றி வந்துள்ளார். வேல்முருகன் நாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்மணியை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

தம்பதிகள் இருவரும் கரூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ரஞ்சினியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், தம்பதிகளை அழைத்து விசாரித்துள்ளனர். 

முடிவில், தம்பதிகள் இருவரும் பிரிந்து அவரவரின் குடும்பத்துடன் சென்று விட்ட நிலையில், காதல் மனைவியை பிரிந்த வேல்முருகன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். பின்னர் விரக்தியில் கண்மாயில் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். 

அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கவே, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்முருகனை, காதல் மனைவி ரஞ்சினியின் சகோதரர் விஜய் நலம் விசாரிக்கச் சென்றபோது, யாரும் எதிர்பாராத வகையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேல்முருகனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இதனால் வேல்முருகன் இரத்த வெள்ளத்தில் வலியால் துடிதுடித்து மிதக்கவே, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், வேல்முருகனின் மச்சான் விஜயை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Andippatti Sister Love Husband Murder Attempt Police Investigation 8 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->