குடும்ப சண்டையில், ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்திற்கு உள்ளாக்கிய தம்பதி..!!
Theni Andippatti Couple Suicide on Family Problem 8 May 2021
கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி அழகு ராணி. இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது குடும்ப சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணவரை பிரிந்த அழகு ராணி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவியின் தாய் வீட்டிற்கு வந்த சசிகுமார் தகராறு செய்துள்ளார். இதனால் அழகுராணி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நாம் தற்கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்த அழகுராணி, அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மனைவி கண்ணெதிரே கிணற்றில் குதித்து தற்கொலை செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்த சசிக்குமார், மனைவியை மீட்க கிணற்றில் குதித்துள்ளார்.
ஆனால், சசிகுமாருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் உடலையும் மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Theni Andippatti Couple Suicide on Family Problem 8 May 2021