தேனி: எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம்.. கைதான மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்..!
Theni Affair woman Murder Husband Police Discovered Murder Mystery 6 Feb 2021
க.புதுப்பட்டி இடையன்குளம் பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் விவகாரத்தில், அவர் கள்ளக்காதலால் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து, அவரின் மனைவியை கைது செய்த காவல் துறையினர், கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள க.புதுப்பட்டி இடையன்குளம் பகுதியில், கடந்த வருடம் ஜூன் 14 ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக உத்தமபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சடலமாக மீட்கப்ட்டவரின் உடல் எரிக்கட்டு இருந்ததால், அடையாளம் காண இயலாமல் தவித்த காவல் துறையினர் எலும்புகளை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், யாரும் மாயமாகியுள்ளனரா? என்பது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வந்துள்ளது.
இறுதியாக, டி.என்.ஏ பரிசோதனையில் சடலமாக மீட்கப்பட்டவர் தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் போயன்மார் தெரு பகுதியை சார்ந்த நாகராஜ் (வயது 42) என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக நாகராஜின் மனைவி முத்துமாரியிடம் (வயது 37) விசாரணை செய்கையில், தனது கணவர் வேலைக்கு சென்று எப்போதாவது வீட்டிற்கு வருவார் என்றும், அதனால் அவரை தேடாமல் இருந்துவிட்டேன் என்றும் கூறி கதறியழுது நாடகமாடியுள்ளார்.
சந்தேகம் தீராத காவல் துறையினர் முத்துமாரியின் நடவடிக்கையை மறைமுகமாக கண்காணிக்கவே, கள்ளக்காதல் பிரச்சனையால் கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முத்துமாரி அளித்த வாக்குமூலத்தில், " எனக்கும், குலாளர் தெரு பகுதியை சார்ந்த செல்வராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறி, அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம்.
செல்வராஜ் க.புதுப்பட்டி பகுதியில் செங்கல் சூலை நடத்தி வந்த நிலையில், அவரது தொழிற்சாலையில் பணியாற்றுகையில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை எனது கணவர் எப்படியோ கண்டறிந்து கண்டித்தார். இதனையடுத்து நாகராஜை தீர்த்துக்கட்ட நானும், செல்வராஜும் முடிவு செய்தோம். சம்பவத்தன்று நாகராஜுக்கு மதுபானம் வாங்கிக்கொடுத்து, போதை ஏறியதும் கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.
இதன்பின்னர், உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து அடையாளம் காண இயலாத வகையில் கருகிய பின்னர் அங்கிருந்து விட்டு சென்றோம். இப்போது காவல் துறையினர் எப்படியோ என்னை கைது செய்துவிட்டார்கள் " என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து முத்துமாரியை கைது செய்த காவல் துறையினர், செல்வராஜை தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Theni Affair woman Murder Husband Police Discovered Murder Mystery 6 Feb 2021