கல்லூரியில் படிக்கும்போதே கள்ளக்காதல்.. திருமணம் முடிந்தும் தொடர்ந்து, பச்சிளம் குழந்தை, பெண் கொடூர கொலை.!! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலால் இளம்பெண் ஒருவரும், அவரது ஒன்றரை வயது மகனும் துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் க.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 22). இவருக்கும், மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான காசிராஜன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த தம்பதிக்கு கரண் சர்மா என்ற மகன் இருக்கும் நிலையில், திருமணத்திற்கு முன்பு பெரியகுளத்தில் உள்ள கல்லூரியில் கலைச்செல்வி படித்து வந்துள்ளார். இதன்போது, சின்னமனூர் தேவர் தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்த சிலம்பரச கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

சிலம்பரசனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கலைச்செல்வி திருமணம் முடிந்த பின்னரும் சிலம்பரசனுடன் தகாத உறவை தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020 செப்டம்பர் 9 ஆம் தேதி குழந்தையுடன் பேரையூர் செல்வதாகக் கூறிய கலைச்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. 

அவரைத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், அவரின் தந்தை உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், கலைச்செல்வி திருமணமான பின்னரும் சிலம்பரசனுடன் கள்ளக்காதல் தொடர்பை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும், தனது நகைகளையும் சிலம்பரசனிடம் கொடுத்து, அதனை விற்பனை செய்து சிலம்பரசன் பெயரில் காரும் வாங்கியுள்ளனர். 

இந்நிலையில், கலைச்செல்வி குடும்பத்தினர் நகைகள் எங்கே மாயமானது? என்று கேட்கத் தொடங்கிய நிலையில், பயந்துபோன கலைச்செல்வி சிலம்பரசன் கண்ணனிடம் நகைகளை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். நகைகளை திரும்ப தராத பட்சத்தில், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கலைச்செல்வி வற்புறுத்தியுள்ளார். 

இதனால், கடந்த 2020 செப்டம்பர் 9-ஆம் தேதி சின்னமனூரில் இருந்து கலைச்செல்வியை சிலம்பரசன் வரவழைத்த நிலையில், நகைகள் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த சிலம்பரச கண்ணன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகனையும் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கிறார். 

பின்னர், தன் இறைச்சிக் கடையில் வேலை பார்க்கும் சிறுவனை இறைச்சி அறுக்கும் கத்தியை எடுத்துவரச்சொல்லி, கத்தியைக் கொண்டு இரண்டு உடலை துண்டு துண்டாக வெட்டி மூன்று சாக்குப்பையில் கட்டி ஆட்டோவில் ஏற்றி சின்னமனூர் முத்துலாபுரம் பகுதியில் உள்ள அய்யனார் குளத்தில் வீசி இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலம்பரசன் கண்ணன் மற்றும் 18 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி இருவரின் உடலும் எலும்பும் கூடுகளாக மீட்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Affair girl and his son Murder Police Investigation 27 March 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->