சென்னையில் நூதன முறையில் வழிப்பறி.! சென்னை வாசிகள் அதிர்ச்சி.!!
theft of nonsense in chennai. chennai residents are shocked.
சென்னை கொத்தவால்சாவடி, பூங்கா நகர், பாரிமுனை பூக்கடை பகுதியில் ஒரு கொள்ளைக் கும்பல் நூதன முறையில் வழிப்பறி செய்தது தெரியவந்தது இந்த கும்பல் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்ததாக தகவல் வெளியானதையடுத்து போலீசார் 7 பேர் கொண்ட கும்பலை கைது கைது செய்தனர்.
பூக்கடையில் நின்று கொண்டிருந்தனர் செவிலியரிடம் மிளகாய் பொடி தூவி பணம் செல்போன் ஆகிய அனைத்தையும் கொள்ளையடித்ததாக பூக்கடைக்கு போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. இதேபோல் பூங்கா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்
சென்னையில் ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகூர் மீரான், ஆதி, கவுதம், டேனியல் சாலமன் இவர்களின் கூட்டாளிகளான தேவராஜ், ஷாஜகான், அஸ்ருதீன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன அவளிடம்.
இவர்கள் 7 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
English Summary
theft of nonsense in chennai. chennai residents are shocked.