நூதன முறையில் பைக்கை திருடிய களவாணி.! கள்ளக்குறிச்சி அருகே கடத்தல்.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி பகுதியில் வங்கி முன்பாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்று பட்டப்பகலில் திருடி செல்லப்பட்ட சம்பவத்தின், சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

கள்ளக்குறிச்சி பகுதியில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில் சங்கர் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வங்கிக்கு உள்ளே சென்று இருக்கின்றார்.

சங்கர் உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே அங்கே வந்த ஒருவன் சுற்றி முற்றி தன்னை யாரவது கவனிக்கிறார்களா என்று வேடிக்கை பார்த்துவிட்டு, எவரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு தான் வைத்திருந்த திருட்டு சாவியை பைக்கில் போட்டு எளிதாக வண்டியின் சைட் லாக்கை திறந்து விட்டுவிட்டு அதன் பின்னர் மீண்டும் தன்னை யாரேனும் கவனிக்கிறீர்களா என பார்த்துவிட்டு பைக்கின் மெயின் லாக்கையும் திறந்து இருக்கின்றான். 

அதன் பின்னர் தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த தொப்பி ஒன்றை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு, அவசர அவசரமாக அந்த இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து வண்டியில் ஏறி அமர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளான். இது குறித்த புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theft near kallakurichi bank


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->